Showing posts with label வன்முறைகள். Show all posts
Showing posts with label வன்முறைகள். Show all posts

வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் !!!


இன்று மிஸ்ஸெளரி மாகாணத்தில் உள்ள ஜோப்லின் (JOPLIN ) நகரில் அமைந்துள்ள The Islamic Center of Joplin என்ற மஸ்ஜிதை ஒரு கயவன் தீயிட்டு கொளுத்தி விட்டான். இதற்க்கு முன்னர் அமரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை-4 அன்று இதே மஸ்ஜிதை கொளுத்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அது தோல்வியில் முடிந்தது. ஆனால் இன்னாலில்லாஹ் , இம்முறை மஸ்ஜித் கரிந்து போய் விட்டது. நல்லவேளையாக யாரும் அந்த நேரம் உள்ளே இல்லாமல் இருந்தது பெரிய பாக்கியம்.

கடந்த முறை நடந்த முயற்சியின் CCTV வீடியோ வை FBI வெளியிட்டு குற்றவாளியின் துப்பு கிடைத்தால் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.



https://www.youtube.com/watch?v=2fsprnwOq4c

நேற்று முன்தினம்  விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு சீக்கிய குருத்வாரா ஒன்றில் புகுந்த வெள்ளை இன தீவிரவாதி பலரையும் சுட்டுக்கொன்றது அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. பொதுவாக அமெரிக்கா, மத சகிப்புத்தன்மையை அழகாக வைத்துள்ள ஒரு நாடு. எல்லா மதங்களை சேர்ந்தவர்களும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதச்  சடங்குகள் செய்வதற்கு நல்ல  சுதந்திரம் உண்டு. அமெரிக்க  அரசியல் அமைப்பு சட்டத்தின் First Amendment தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது.

ஆனாலும் சமீப காலமாக அதிகரித்து வரும் இது போன்ற வன்முறைகள் நடுநிலையாளர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. உலகம் முழுவதில் இருந்தும் படித்த முஸ்லிம்கள் அமெரிக்கா வந்து பெருவாரியான அளவில் நல்ல வாழ்க்கைத்தரத்தை அமைத்துக் கொள்வதும் , முக்கியமான எல்லா நகரங்களிலும் மஸ்ஜித்கள் பெருகி வருவதும் இந்த துவேஷங்களுக்கு காரணமாக இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது.