சின்மயி சர்ச்சை. ஒரு தொகுப்பு !!


பாடகி சின்மயி மீது twitter தளத்தில் சிலர் தாக்குதல் தொடுத்தது சம்பந்தமாக வெடித்த பிரச்னை தான் இந்த வாரம் சமூக வலைத்தளங்களில் ஹாட் டாபிக் !!!

கருத்துச் சுதந்திரம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனாலும் அது காரணம்  மற்றவர்களின் பர்சனல் விஷயங்களை நோண்டுவதோ அசிங்கப் படுத்துவதோ கூடாது... கருத்துச் சுதந்திரம் என்பதை தங்களுக்குத் தேவைப் படும் போது எடுத்துகொள்வதும் அதுவே மற்றவர்களுக்கு என்றால் அது கத்தரிக்காய் சுதந்திரமாக மாறுவதையும் சமீபத்தில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் குறித்து எடுக்கப்பட்ட ஒரு படத்தில் தெரிந்து கொள்ள முடிந்தது.

சுருக்கமாகச் சொன்னால்  With great freedom comes great responsibility என்பது மிகப் பொருத்தம் இங்கே. கருத்தை கருத்தால் மட்டுமே எதிர்க்க வேண்டும். தனிநபர் தாக்குதல்கள் வேண்டாமே !!


இது தொடர்பாக எழுதப்பட்ட சில பதிவுகளின் தொகுப்பு..


1. சிங்களன் ஒருவன் தமிழக முதல்வரை படு கேவலமாக வரைந்து விமர்சித்த போது வெகுண்டெழுந்த பதிவுலகம், அதே தவறை ராஜன் இப்போது செய்திருக்கும் போது வாய் மூடி இருப்பதேன் என்று ஆதரங்களுடன் கேள்வி கேட்கும் பதிவு


http://koojanleeks.blogspot.in/2012/10/blog-post.html


2 . புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இது தொடர்பாக  நடந்த விவாதம்
http://saavinudhadugal.blogspot.in/2012/10/blog-post_24.html 

3 .  விசாரிக்காமல் எடுத்த எடுப்பிலேயே சம்பந்த்தப்பட்டவர்களை சிறையில் அடைத்தது தவறு என்ற லக்கி லுக்கின் பார்வை.
http://www.luckylookonline.com/2012/10/blog-post_25.html

4 .ராஜனின் குழந்தையை வைத்து அவரை விடுவிக்க வேண்டும் என்று சின்மயிக்கு வேண்டுகோள் வைக்கும் தோட்டா
http://www.twitlonger.com/show/jnuqpt

5 .இதே போன்ற தவறான வார்த்தைகளுடன் போடப்பட்ட மற்ற tweet களையும் கணக்கில் எடுக்க வேண்டும் என்றும் பிரச்னை எங்கிருந்து ஆரம்பித்தது என்பது பற்றியும் பொதிகைச் செல்வன்
http://www.twitlonger.com/show/jobjp7

6 . இதே போன்று எனக்கும் நடந்தது. எனவே தவறு செய்தவர்கள் தண்டிக்கப் பட வேண்டும் என்று சொல்லும் சாரு நிவேதிதா
http://charuonline.com/blog/?p=3511 


7. ஒரு பெண் என்பதால் தொடுக்கப்பட்ட பாலியல் அவதூறு, இழிவு படுத்தும் பேச்சுக்கள், தாயை ஆபாசமாக பழிக்கும் சொற்கள் கண்டிக்கத்தக்கவையே. எதிர்தரப்பின் பேச்சுக்கள் ஆபாசமாகக் கருதப்படுவதுபோல், இந்தியாவின் சாதியச் செயல்பாடு குறித்த புரிதலின்றி தான் வளர்ந்திருக்கும் ஆதிக்க சாதி, மேட்டுக்குடி வர்க்கப் பார்வையில் சின்மயி வைத்த கருத்துக்களும் ஆபாசமானவையே. குறிப்பாக “so called oppressors’ என்கிற பதம்.

http://www.twitlonger.com/show/jovq8u


8. சமூக வலைத்தளங்களில் வரும் எதிர்வினைகளை எவ்வாறு எதிர்கொள்ளவேண்டும் என்பது பற்றியும் மற்ற புகார்களை விட சின்மயியின் புகாருக்கு காவல்துறை முக்கியத்துவம் கொடுத்ததன் காரணம் பற்றியும் ஆராயும் சவுக்கு

http://savukku.net/home1/1680-2012-10-23-05-56-48.html


9. முன்தணிக்கை சாத்தியமில்லாத இந்த ஊடகத்தில் பங்கு பெறும் நமக்கு அதிகப் பொறுப்புணர்ச்சி வேண்டும். என்ன வேண்டுமானலும் அவதூறுகளை அள்ளி வீசுவது, பொய்க் குற்றச்சாட்டுகளைக் கக்குவது, பெண்களாயின் அவர்களின் ஒழுக்கத்தைப் பொது வெளியில் கேள்விக்குள்ளாக்குவது, இவற்றை எப்படி நியாயப்படுத்த இயலும்?

http://kosukumaran.blogspot.in/2012/10/blog-post_24.html

10.  நான் எப்போது  அசிங்கமாகப் பேசினேன் என்று சின்மயியிடம் கேட்கும் ராஜன்

http://www.rajanleaks.com/2012/03/blog-post.html?m=1


11. பிரச்னை குறித்து மாமல்லன். இவரு என்ன சொல்ல வராருன்னு எனக்குப் புரியல.. நீங்களும் படிச்சு கொழம்புங்க :)
http://www.maamallan.com/2012/10/blog-post_23.html


 
 



பார்த்ததும் படித்ததும் கேட்டதும் - 1

அஸ்ஸலாமு அலைக்கும் !!


1. இளம் எழுத்தாளர்களில் நான் படிப்பவர்களில்  ஒருவர் முத்துகிருஷ்ணன்.
கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான மக்கள் போராட்டத்தின் சமீபத்திய நிலவரம் குறித்து ஆழமான கட்டுரை ஒன்றை சமீபத்தில் வரைந்திருந்தார்.
ஏன் பன்னாட்டு அணுசக்தி நிறுவனகள் இந்தியாவைக் குறிவைக்கின்றன? ஏன் திடீரென இந்த அணுசக்தி மோகம்? என்ற கேள்விகளுக்கு விடையளிக்க முயன்றுள்ளார்.


2. சூப்பர்ஸ்டார்கள் என்ற தலைப்பில் இஸ்லாமிய சமூகத்தின் தலைசிறந்த பெரியார்களை அறிமுகப்படுத்துகிறார் ஷேக் ஓமர் சுலைமான். பத்து நிமிடங்களில் இறைத்தூதரின்(ஸல் ) நம்பிக்கைக்குரிய  நண்பரும்  அவருக்குப் பின்னால் உலகின் தலைசிறந்த நம்பிக்கையாளருமான முதல் கலீபா அபூபக்கர் ரலி அவர்களைப் பற்றி சின்ன அழகான உரை.


3. தீராத நோய்களும் நாட்பட்ட நோய்களும் ஏற்படுத்திச் செல்லும் வலிகளும் வடுக்களும் தாங்க முடியாதவை. மெல்லக் கொல்லும் நஞ்சு போல மனிதனை  கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை நோக்கி நகரவைப்பவை. .
யாரென்றே தெரியாத ஒரு சகோதரியின் இந்த துயரம் நெஞ்சை பாதித்தது. நம்மாலான உதவிகளை அனுப்புவோம்.. கூடவே பிரார்த்தனைகளும். அவ்விரண்டையும் தவிர்த்து கொடிய நோய்களுக்கு எதிராய் நிராயுதபாணிகள் நாம்.

படித்ததில் கனத்தது மனிதாபிமானியின் பதிவு

4. கேன்சர் நோயின் தீவிரம், பாதிப்பு போன்றவற்றை குடும்பத்திலேயே பார்த்திருக்கிறேன். அதனால் ஏற்பட்ட மரணத்தையும்.
தோலில் வரும் கேன்சர் மற்றவற்றை விட கொஞ்சம் வீரியம் குறைந்தது என்பதும் அதற்கான சிகிச்சைகள் மற்றவற்றை விட நிறைய இருக்கிறது என்பதும் ஒரு பெரிய ஆறுதல். ஆனாலும் கேன்சர் கேன்சர் தான்..சந்தேகமே இல்லை..
அல்லாஹ் இவருக்கு பூரண குணத்தை அளித்து அவர் களப் பணிகளுக்காத் திரும்ப வேண்டும் என்பது அணைத்து முஸ்லிம்களின் துஆ. பதினெட்டு வருடத்துக்கு முன்பு எங்கள் ஊருக்கு மஞ்சள் பையை தோளில் போட்டு பொதுக்கூட்டம் பேச வந்த அந்த எளிமையான மனிதர் இன்றும் பசுமையாக கண்ணில் நிற்கிறார்.

நியூயார்க் : சாக்லேட் டிரைவர்

நியூயார்க் நகரம்...உலகின் மிக முக்கிய பெருநகரங்களில் ஒன்று. அமெரிக்காவின் வர்த்தகத் தலைநகரம்...முரண்பாடுகளின் மூட்டை என்றும்  சொல்லலாம் :) ... நல்லது கெட்டது என்று எல்லாத்திலுமே முதலிடம்...தெருவில் நடந்து சென்றால் நீங்கள் இதுவரை கேட்டிராத உலகின் எல்லா  மொழிகளையும் கேட்கலாம்..உலகின் பெருவாரியான இன ,தேச மக்களையும் பார்த்துவிடலாம். அப்படி ஒரு கலவை !

YELLOWCAB  நகரின் உயிர்நாடிகளில் ன்று...இடப் பற்றாக்குறை மற்றும் அதிகப்படியான பார்க்கிங் செலவு காரணத்தால் பெரும்பாலானவர்கள் சொந்தக் காரில் வராமல் இந்த yellowcab தான் பயன்படுத்துவார்கள்...

அப்படி ஒரு டாக்சியில் ஏறி பயணம் செய்கிறீர்கள்...பொதுவாக பின்னிருக்கையில் அமரும்போது முன்னிருக்கையின் பின்னால் உள்ள இடத்தில் ஒரு சின்ன ஸ்க்ரீன் வைத்து செய்திகள் ஓடவிட்டிருப்பார்கள்.அல்லது ஒரு திரைப்படம்..இல்லையெனில் சில வீடியோ விளம்பரங்கள்...
ஆனால் நீங்கள் ஏறிய டாக்சியில் கீழ்க்காணும் வாசகம் இருக்கிறது :)

 LOOK BEHIND AND CHOOSE
FREE CANDY OF YOUR CHOICE !!
ENJOY AND MAKE A WISH !!!
REMEMBER LIFE IS TOO SHORT SO
BE HAPPY IN YOUR LIFE

(பின்னால் திரும்பி அங்கே வைக்கபட்டிருக்கும் சாக்லேட் இல் இருந்து கொஞ்சம் இலவசமாக எடுத்துக்கொள்ளுங்கள்...வாழ்க்கை ரொம்ப சின்னது..அதில் மகிழ்ச்சியாக இருங்கள் :) )

திரும்பி பார்க்கிறீர்கள்..காரின் பின்பக்கம் முழுவதும் சாக்லேட் மற்றும் மிட்டாய்கள் :)

ஏன் இப்படி என்று கேட்டால் புன்னகைக்கிறார் டாக்சியின் டிரைவர் மன்சூர் காலித் ..
நியூயார்க் நகர வாழ்க்கை கடும் மன அழுத்தத்தை தரக்கூடியது... எனது காரில் பயணம் செய்யும் பயணிகள் stress நிறைந்து பயணிப்பதை பார்த்திருக்கிறேன்..அவர்களின் முகத்தில் புன்னகையை வர வைக்கும் ஒரு சின்ன முயற்சி தான் இது...

எப்போது தோன்றியது இந்த யோசனை உங்களுக்கு?
1993 இல் பாகிஸ்தானில் இருந்து நியூயார்க்   வந்தேன்..1997 லிருந்து  டாக்சி ஒட்டுகிறேன்...சமீபத்தில் இரண்டு வயதான எனது மகனுக்கு இதய நோயால் பாதிப்பு வந்தது. இரண்டு முறை இதய மாற்று அறுவை சிகிச்சை  செய்தும்  முடியவில்லை.பின்னர் சிறுநீரகமும் பாதிப்படைந்து ..

ஆஸ்பத்திரியில் அவன் படுத்திருக்கும்போது பகலெல்லாம் கார் ஓட்டிவிட்டு இரவு ஒரு மணிக்கு அவனை பார்க்க மருத்துவமனை செல்வேன்.. செல்லும்போது அந்த வார்டில் டூட்டியில் இருக்கும் டாக்டர் மற்றும் நர்சுகளுக்கு  காபி மற்றும் snacks எடுத்துச் செல்வேன்.அந்த இரவு வேளையில் இப்படி எதிர்பாராமல்  நான் எடுத்துச் செல்லும் காபி அவர்களுக்கு பிடித்திருந்தது...என்னிடம் அவர்கள் பரிவாக இருந்தார்கள் அதுபோலவே நானும் அவர்களிடம்..

நோய் முற்றி ஒருநாள் அவன் இறந்து போனான்..நிலைகுலைந்து போனேன்..மீளவே முடியாத அதிர்ச்சியில் இருந்தேன்...
ஆனால் அதில் இருந்து நான் ஒரு பாடம் கற்றுக் கொண்டேன்.. "வாழ்க்கை மிகச் சிறியது" என்ற பாடம் தான் அது..

மகனின் மரணத்திற்குப் பின்னால் திடீரென ஒருநாள் கடவுள் இந்த எண்ணத்தை என்னில் விதைத்தார். அன்றிலிருந்து இப்படி காரில் மிட்டாய் கொடுக்கும் செயலை செய்ய  ஆரம்பித்தேன்"என்கிறார்.  தனது சோகத்தை மறந்து  வித்தியாசமாய்  செயல்படும் இந்த டிரைவர் பயணிகளின் தற்போதைய ஸ்டார்! 

இந்த வித்தியாசமான அணுகுமுறையை ரசித்த பயணி ஒருவர் இதைப் பற்றி tweet செய்ய சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவியது இந்தச் செய்தி. பிரபலமான பத்திரிக்கைகளில் இந்த செய்தி வெளிவந்தது. பார்க்க

YELLOW CAB இன் அதிகாரபூர்வ இணையதளமும் இவரை பற்றி செய்தி வெளியிட்டுள்ளது.  பார்க்க


https://twitter.com/CandyCabNYC  என்ற twitter  ID யில் தினமும் tweet செய்கிறார். இவர்..இவரின் காரில் பயணம் செய்தவர்களும் இவரைப் பற்றி tweet  செய்கின்றனர். பாகிஸ்தானுக்கு திரும்பி வாருங்கள்..உங்களைப் போன்றவர்கள் தான் இந்த தேசத்துக்கு இப்போது தேவை என்று ட்விட்டரில் அழைக்கிறார் ஒருவர்.. பெருகும் மக்களின் நன்றிக்கு ட்விட்டரில் இப்படி பதில் சொல்கிறார் காலித்..
 I am so Thanks full to Allah (GOD). HE IS GREAT. And you are his beautiful people's .

ஓக்கே சகோஸ்... விஷயம் அவ்வளவுதான்... சரி இனி நீங்களும் நானும் என்ன செய்யப் போகிறோம் ??இதான் முக்கியமான விஷயம் :-)

தினமும் காலையில் எழுந்ததும் "இன்று சிலரின் முகத்தில் புன்னகை பூக்கச் செய்வது எனது தீர்மானம் என்று உறுதி எடுப்போம்"... உறுதி எடுக்குறது மட்டும் இல்ல... அதை எப்பாடுபட்டாவது நிறைவேற்றிவிட்டு மனநிறைவோட இரவு தூங்கச்செல்வோம் :-) ட்ரை பண்ணிதான் பாருங்களேன் :-)


Come on சகோஸ் !! சிரிக்க வைப்போம் ...மகிழ்ச்சியடைவோம் !! வாழ்க்கை மிகச் சிறியது !!! 

"சிரித்த முகத்துடன் உன் சகோதரனைச் சந்திப்பது கூட தர்மம் தான் " - நபிமொழி