திருமறை மனனப்போட்டி !!! நெகிழ வைக்கும் பிஞ்சுகள் !!!

அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் !!!!

ஒரே ஒரு புத்தகம்! ஒரே மொழி! உலகம் முழுவதிலிருந்தும் வந்து குவியும் போட்டியாளர்கள். புத்தகம் எழுதப்பட்டிருக்கும் மொழியின் எந்த வசனத்தையும் பொருளுணர்ந்து படித்தறியாத போட்டியாளர்கள். இப்படி அர்த்தம் புரியாவிடின் கூட 600 பக்கங்களுக்கு மேற்ப்பட்ட அந்த புத்தகத்தை ஒரு புள்ளி கூட மாறாமல் ஞாபகத்தில் வைத்திருப்பவர்கள். இப்படி பல வித்தியாசமான சுவாரசியங்கள்!

உலக அளவில் திரைப்படங்களை தயாரிக்கின்ற, ஒளிபரப்புகிற HBO சேனல் கடந்த வருடம் "KORAN BY HEART " என்று ஒரு ஆவணப்படத்தை வெளியிட்டது. வருடா  வருடம் எகிப்தில் நடைபெறும் " The International Holy Qur'an Competition " போட்டியையும் அதற்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும் மூன்று சிறார்களையும் மையப்படுத்தும் ஒரு ஆவணப்படம்.

i )  மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானைச் சேர்ந்த நபியுல்லாஹ்  (Nabiullah )
ii ) இந்துமாப்பெருங்கடல் நாடான மாலத்தீவைச் சேர்ந்த சிறுமி ரிப்தா  (Rifdha )
iii ) மேற்கு ஆப்பிரிக்க நாடான செனெகல் நாட்டைச்சேர்ந்த ஜமீல் (Djamil )

மூவரும் வெறும் பத்து வயதே ஆனவர்கள். அரபியை தாய்மொழியாக கொண்டிராதவர்கள். ஆனாலும் புனிதமான குரானை முழுவதும் மனனம் செய்தவர்கள்.

இந்த மூன்று சிறுவர்களும் எந்த பின்புலத்திலிருந்து வருகிறார்கள்? எப்படி இந்த போட்டிக்கு தயாராகிறார்கள்? மொழியும் கலாச்சாரமும் தெரியாத ஒரு புதிய தேசத்திற்கு சென்று எப்படி அருமையாக குரானை ஓதுகிறார்கள் என்பதை இந்த ஆவணப்படம் அழகாக  காட்டுகிறது.

"ஒட்டுமொத்த ஆப்பிரிக்க கண்டத்திற்கும் நீதான் பிரதிநிதி. பயப்படாமல் அழகாக ஒது" என்று உணர்த்துவதினூடே, குரானின் பக்கம் மக்கள் திரும்பும்போது உலகில் கொலை கொள்ளை நீங்கி அமைதி திரும்பும் என்று பத்து வயதான சிறுவன் ஜமீலுக்கு போதிக்கிறார் அவன் ஆசிரியர். !!!

காருக்குள் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டே விளையாட்டுத்தனமாக போட்டிக்கு வரும் சிறுவன் நபியுல்லாஹ் !!!

பிறந்ததிலிருந்து அம்மாவை பிரிந்திராத முதல்முறையாக அம்மாவை  விட்டு அப்பாவுடன் கடல் மார்க்கமாக sea plane இல் ஏறி பறந்து செல்லும் ஹிஜாப் அணிந்த சின்னஞ்சிறுமி ரிப்தா !!!

70 நாடுகளில் இருந்து வந்திருக்கும் 110 போட்டியாளர்களுடன் வயது வரம்பின்றி இவர்கள் போட்டியிடுவதும் சிறிதும் பிசகாமல் மயக்கும் குரலில் அவர்கள் ஓதுவதும் உங்கள் காதுகளில் இன்பத்தேன் கொண்டுவந்து பாய்ச்சும்!

இந்த ஆவணப்படத்தை இயக்கிய கிரேக் பார்கேர் (Greg Barker) இவ்வாறு உணர்ச்சிமிகுதியுடன் குறிப்பிடுகிறார்: "சந்தேகமில்லாமல் இந்த சிறுவன் ஒரு genious . அரபி தெரியாமலே இப்படி ஓதுவது ஒரு மிகப்பெரிய விஷயம் என்று கூறி சிறுவன் நபியுல்லாஹ்வை நீதிபதிகள் முத்தமிடுவது உங்கள் கண்களில் நீரை கோர்க்கச்செய்யும்"

போட்டி
நடப்பதை கண்காணிக்கும் குரானிய ஒலியின் சந்தத்தை ஆய்வு செய்யும் கிறிஸ்டினா நெல்சனின் (Kristina Nelson) பேட்டியும் இடம்பெறுகிறது'The Art of Reciting the Quran' என்ற புத்தகத்தின் ஆசிரியர் இவர். குரானின் ஒலி பாதுகாக்கப்பட்டது பற்றி பேசுகிறார் இவர் : “முதல்முறை நபியுல்லாஹ் போட்டியில் ஓதியதை கேட்டபோது எல்லாருமே உறைந்து போனோம்.முஸ்லிம் அல்லாதவர்களின் காதுகளுக்கு கூட உணர்ச்சிமிக்கதாக, தெய்வீகமாக மற்றொரு உலகிலிருந்து வந்தது போன்று இருந்தது. அதிலும் பத்து வயதே ஆன சிறுவன் என்பதால் நம்மை ஆட்கொள்ளச்செய்தது. ஒரு மிகச்சிறந்த விளையாட்டு வீரன் தனது உச்சகட்டத்தை வெளிப்படுத்துவது போன்று இருந்தது"


// The first time we heard Nabiollah recite at the competition, everyone was completely transfixed. Even to non-Muslim ears, his performance was so emotional, so spiritual and otherworldly, and coming from a 10-year-old boy, really engrossing. It's like seeing an elite athlete at the height of their abilities. That was the moment I knew we really had a film. I wanted to know more. Does he know what he's saying? How did he come from the middle of Tajikistan to this tournament in Cairo? What's going to become of him?//

தவறாக ஓதியதால் போட்டியில் வெற்றி பெறமுடியாத ஆப்பிரிக்க சிறுவனுக்கு எகிப்தின் ஒரு முக்கியமான பள்ளிவாசலில் வாய்ப்பு கொடுக்கப்படுவது ஒரு நெகிழ்வான நிகழ்ச்சி.

உலகின் எல்லா மூலையிலும் மொழியின் தடைகளைத் தாண்டி புனித குரான் மனனம் செய்யப்படுவதும், தங்கள் அதி அற்புதமான குரல்களால் அதன் சந்தம் மற்றவர்  காதுகளில் தேனாக பாய்ச்சப்படுவதும்  கடந்த 1400 வருங்களாக நடந்தேறும் ஒரு அற்புத நிகழ்வு. தஜிகிஸ்தானின் நபியுல்லாஹ்வும், செனகலின் ஜமீலும், மாலத்தீவின் ரிப்தாவும் அதன் கடந்த வருடத்திய சாட்சிகள் !!! இறைவனே மிகப்பெரியவன்.

அழகான
இந்த ஆவணப்படத்தை  நீங்களும் பாருங்கள் :


ஆவணப்பட இயக்குனர் கிரேக் பார்கரின் பேட்டியை தவறாமல் படியுங்கள். நல்ல கருத்துக்கள்.

அதிக தகவல்களுக்கு கீழ்காணும் லிங்கை பார்க்கவும்.
http://www.imdb.com/title/tt1766189/

வழிபாட்டுத்தலங்கள் மீதான தாக்குதல்கள் !!!


இன்று மிஸ்ஸெளரி மாகாணத்தில் உள்ள ஜோப்லின் (JOPLIN ) நகரில் அமைந்துள்ள The Islamic Center of Joplin என்ற மஸ்ஜிதை ஒரு கயவன் தீயிட்டு கொளுத்தி விட்டான். இதற்க்கு முன்னர் அமரிக்காவின் சுதந்திர தினமான ஜூலை-4 அன்று இதே மஸ்ஜிதை கொளுத்த ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அது தோல்வியில் முடிந்தது. ஆனால் இன்னாலில்லாஹ் , இம்முறை மஸ்ஜித் கரிந்து போய் விட்டது. நல்லவேளையாக யாரும் அந்த நேரம் உள்ளே இல்லாமல் இருந்தது பெரிய பாக்கியம்.

கடந்த முறை நடந்த முயற்சியின் CCTV வீடியோ வை FBI வெளியிட்டு குற்றவாளியின் துப்பு கிடைத்தால் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளது.



https://www.youtube.com/watch?v=2fsprnwOq4c

நேற்று முன்தினம்  விஸ்கான்சின் மாகாணத்தில் ஒரு சீக்கிய குருத்வாரா ஒன்றில் புகுந்த வெள்ளை இன தீவிரவாதி பலரையும் சுட்டுக்கொன்றது அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. பொதுவாக அமெரிக்கா, மத சகிப்புத்தன்மையை அழகாக வைத்துள்ள ஒரு நாடு. எல்லா மதங்களை சேர்ந்தவர்களும் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மதச்  சடங்குகள் செய்வதற்கு நல்ல  சுதந்திரம் உண்டு. அமெரிக்க  அரசியல் அமைப்பு சட்டத்தின் First Amendment தெளிவான வரையறைகளை வகுத்துள்ளது.

ஆனாலும் சமீப காலமாக அதிகரித்து வரும் இது போன்ற வன்முறைகள் நடுநிலையாளர்களை கவலை கொள்ளச் செய்துள்ளது. உலகம் முழுவதில் இருந்தும் படித்த முஸ்லிம்கள் அமெரிக்கா வந்து பெருவாரியான அளவில் நல்ல வாழ்க்கைத்தரத்தை அமைத்துக் கொள்வதும் , முக்கியமான எல்லா நகரங்களிலும் மஸ்ஜித்கள் பெருகி வருவதும் இந்த துவேஷங்களுக்கு காரணமாக இருக்குமோ என்று சந்தேகிக்க வைக்கிறது.

வீட்டுத்தோட்டமும் இப்தாரும் !!!

ஒரு உறவினர் வீட்டுக்கு இப்தார் விருந்துக்கு அழைத்திருந்தார்கள். பல தசம ஆண்டுகளுக்கு முன்னே அமெரிக்கா வந்து செட்டில் ஆகி அமெரிக்கர்கள் ஆகவே மாறியவர்கள் என்பதால் பீட்சாவும் பர்கரும் தான் வைத்திருப்பார்களோ என்று எண்ணிச்சென்ற எனக்கு பிரியாணியும் தால்ச்சாவும் அதிர்ச்சியை கொடுத்தது. தேவையான அளவு மட்டுமே spice சேர்த்து acidity தொந்தரவுகள் வாராமல் ஆரோக்கியமான உணவு.

இவையெல்லாம் விட பெரிய தகவல் எனக்கு கடைசியில் காத்திருந்தது. அது என்னவெனில், உணவில் அவர்கள் சேர்த்திருந்த காய் கனிகள் அனைத்துமே அவர்களே வீட்டில் விளைவித்துக் கொண்டது என்பது தான். ஆச்சரியமாக இருந்தாலும் இது இன்று நிறைய அமெரிக்கர்கள் மேற்கொள்ளும் ஒரு நடவடிக்கை தான் ..

அமெரிக்கர்கள் சில வருடங்களாக, குறிப்பாக கடந்த பத்து வருடங்களாக உணவுப்பொருட்களில் organic வகை உணவுகளை உட்கொள்ளுவதை அதிகமாக்கி வருகிறார்கள். எல்லா கடைகளிலும் organic பொருட்கள் வைக்கும் பகுதி பெரிதாகிக் கொண்டே போகிறது. அதன் இன்னொரு உச்சம் தான் ரசாயனங்கள் பயன்படுத்தாமல் வீட்டிலேயே சிறிய தோட்டம் வைத்து காய் கனிகள் பயிரிடுதல் .

இந்தியாவில் நடுத்தர நகரங்களில் கூட முன்பு பழக்கமாக இருந்த ஒரு விடயம் தற்போது அருகி வருகிறது. சந்தையில் கிடைக்கும், ரசாயனங்களால் செறிவூட்டப்பட்ட காய்களால் உடல் முழுவதும் நச்சுப் பொருட்களின் அளவு அதிகரித்தது தான் மிச்சம்.
முன்பொரு காலத்தில் இந்திய கிராமங்களில் பெருவாரியாக இருந்த வீட்டுத்தோட்டம் இன்று அமெரிக்கர்களால் அழகாக நடைமுறைப் படுத்தப்படுகிறது. நாமோ பாரம்பரியங்களை விட்டு ரசாயனங்களிடம் சரணடைகிறோம்.

மேலும் படிக்க
1. http://www.sramakrishnan.com/?p=2471
2.http://maduraivaasagan.wordpress.com/2011/07/28/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88-%E2%80%93-%E0%AE%89%E0%AE%B4%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/